ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அளித்ததையடுத்து வெளியே வந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நடிகர் ரஜினி நேற்று வாழ்த்து அனுப்பி இருந்தார். அதில், ஜெயலலிதா ஆரோக்யத்துடனும் நலமுடனும் இருக்கவும் வாழ்த்து தெரிவித்த ரஜினி, தீபாவளி வாழ்த்தும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று (அக்டோபர் 20) ரஜினிக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிடுகையில், உங்களின் அன்புக்கும் கருணை உணர்விற்கும் எனது நன்றி. அவர் நல்ல ஆரோக்யம், மகிழ்ச்சி மற்றும் செயல்கள் அனைத்திலும் வெற்றியுடன் நீண்டகாலம் வாழ்வதற்காக நானும் இறைவனை பிராத்திக்கிறேன். எனது வாழ்த்துக்களை உங்களின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.