ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கவியரசர் கண்ணதாசன்-எம்.எஸ்.விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில் கவியரசர் கண்ணதாசனின் 11ம் ஆண்டு விழா குமார ராஜா முத்தையா அரங்கில் நடந்தது. விழாவை குமாரராணி மீனா முத்தையா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இலக்கிய சிந்தனை ப.லட்சுமணன் தலைமை தாங்கி கவிஞர்கள் அரு.நாகப்பன், கயல் தினகரன் ஆகியோருக்கு கவியரசர் விருது வழங்கினார்.
விருது பெற்றவர்களை பாராட்டி இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசினார். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கவியரசரின் பாடல்களும், எனது பாமாலைகளும் என்ற தலைப்பில் பேசினார். பின்னர் கவியரசரின் பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். அறக்கட்டளை தலைவர் எம்.எஸ்.விஸ்வநாதன் வரவேற்றார். முடிவில் ஏ.நாகப்பன் நன்றி கூறினார். விழாவில் அறக்கட்டளை செயலாளர் ஏவிஎம்.சரவணன், நல்லி குப்புசாமி, முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.