ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பூஜை, கத்தி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வருவதாக சொல்லப்பட்டநிலையில், சில நாட்களாக புலிபார்வை படமும் தீபாவளிக்கு வெளிவரவிருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டு வந்தது. விஷால் தயாரித்துள்ள பூஜை படத்தை வாங்கி தமிழகம் முழுக்க வெளியிடும் வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்புதான் புலிபார்வை படமும். ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிடுவது என்பது சாதாரண விஷயமில்லை. வேந்தர் மூவிஸ் எப்படி புலிபார்வை, பூஜை ஆகிய இரண்டு படங்களையும் தீபாவளிக்கு வெளியிடப்போகிறது? என்று திரையுலகினரே வியந்தநிலையில், தற்போது புலிபார்வை படத்தை தள்ளி வைத்துள்ளனர்.
புலிபார்வை படத்தை தீபாவளிக்கு வெளியிட தீர்மானித்தது ஏன்? பிறகு வாபஸ் பெற்றது ஏன்? கத்தி படத்துக்கு எதிர்ப்பு பலமாக இருப்பதால், ஒருவேளை அப்படம் ரிலீஸ் ஆகாமல் போனால் அந்த தியேட்டர்களில் புலிபார்வை படத்தை ரிலீஸ் செய்யலாம் என்ற திட்டத்திலேயே தீபாவளி வெளியீடு என்று விளம்பரம் கொடுக்கப்பட்டு வந்தது. கத்தி படம் வெளிவருவதால் அந்தப் படத்தின் மீது தமிழ் இன உணர்வாளர்களின் கவனம் குவிந்திருக்கும். இந்த நேரத்தில் சத்தமில்லாமல் புலிபார்வை படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்பதும் இன்னொரு காரணம்...! இப்படி எல்லாம் திட்டமிட்டும் கடைசிநேரத்தில் புலிபார்வை படத்தை தீபாவளிக்கு வெளியிடும் திட்டத்தை கைவிட்டுவிட்டனர். காரணம்.. பூஜை படத்தை 20 கோடி கொடுத்து வாங்கி இருப்பதால் அந்தப் பணத்தை லாபத்துடன் திரும்ப எடுக்க வேண்டும் என்பதால் பூஜை படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளனர்.