'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒரு காலத்தில் கணுக்கால் கவர்ச்சியை காட்ட வேண்டும் என்று சொன்னாலே கடித்து தின்று விடுவது போன்று டைரக்டர்களை முறைத்துப் பார்த்தவர்தான் பூர்ணா. ஆனால் அவர் அறிமுகமான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்த கோட்டை, துரோகி, வித்தகன் என எந்த படமும் வெற்றி பெறவில்லை.
அதனால் ராசியில்லாத நடிகை என்று ஓரங்கட்டப்பட்டார் பூர்ணா. இருப்பினும் அண்டை மாநில மொழிப்படங்களில் நடிக்கச் சென்றாலும், மீண்டும் மீண்டும் தமிழில் முயற்சிகளை தொடர்ந்த பூர்ணாவுக்கு கிடைத்த ஜன்னல் ஓரம், தகராறு போன்ற படங்களும் வழக்கம்போல் ஏமாற்றி விடவே, தற்போது ஜெயம்ரவி நடிக்கும் அப்பாடக்கர் படத்தில் குத்துப்பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார். சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் அஞ்சலி ஆடியது போன்று இந்த பாடலில் ஜெயம்ரவியுடன் பூர்ணா ஆடியிருக்கிறாராம்.
சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் நடைபெற்ற அந்த பாடல் காட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆடைகுறைப்பு செய்து ரவுண்டு கட்டி ஆடியிருக்கிறாராம் பூர்ணா. இந்த சேதியறிந்த அவரது சினிமா உலக தோழிகள் சிலர், குத்துப்பாட்டுக்கு ஆடி எதற்காக உனது இமேஜை கெடுத்துக் கொள்கிறாய்? என்று அவரை மூடுஅவுட் செய்தார்களாம்.
அதனால் டென்சனான பூர்ணா, குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடுவது ஒன்றும் அசிங்கமான விசயமில்லை. அதுவும் ஒரு கலைதான். அதிலும் நான் ஒரு டான்சர். அதனால் என்னிடம் போய் நடனத்தைப் பற்றி இப்படியெல்லாம் சொல்லாதீர்கள் என்று அவர்களிடம் கடிந்து கொண்டாராம் பூர்ணா.