'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சொத்து குவிப்பு வழக்கில் கைதான ஜெயலலிதா 20 நாட்களாக பெங்களூர் சிறையில் இருந்து விட்டு உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீன் காரணமாக நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இதை அதிமுகவினர் தமிழகமெங்கும் இனிப்பு வழங்கி, பட்டாசுகள் வெடித்து தீபாவளித்திருநாள் போன்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும் என்று ஏற்கனவே உண்ணாவிரதம இருந்த தமிழ்த்திரையுலகினரும் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர். அதோடு அவரை வரவேற்று வாழ்த்தியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்தும் ஜெயலலிதாவை வாழ்த்தி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், நீங்கள் ஜாமீனில் விடுதலை அடைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீங்கள் மன அமைதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன். உங்களுக்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ள ரஜினி, ஜெயலலிதாவுக்கு தீபாவளி வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளர்.