தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
சமீபத்தில் நடந்த சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தேர்தலில் நளினி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பதவி காலத்தில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த அவர் முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
சின்னதிரை நடிகர்கள் சங்கத்தில் பெண்கள்தான் அதிக அளவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதனால் ஒரு பெண் தலைவராக வந்தால் நன்றாக இருக்கும் என்று என்னை தேர்வு செய்திருக்கிறார்கள். நானும் என்னால் முடிந்த பல திட்டங்களை செயல்படுத்த இருக்கிறேன்.
சங்கத்திற்கென்று சொந்த கட்டிடம் வாங்க முயற்சிப்பேன். இதற்கு எப்படி நிதி திரட்டலாம் என்று யோசித்து வருகிறேன். எங்கள் சங்க உறுப்பினர்கள் பலர் வேலையின்றி இருக்கிறார்கள். இந்த நிலையில் பல சேனல்கள் இந்தி, கொரியன், ஜப்பானிய சீரியல்களை டப் செய்து ஒளிபரப்புகிறது. இதனால் எங்கள் வேலை வாய்ப்பு பறிபோகிறது. இது குறித்து சேனல்களுடன் பேச இருக்கிறேன். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை செய்தால் ஒண்ணறை நாள் கால்ஷீட்டாக கணக்கில் கொள்ள வேண்டும் என்ற தயாரிப்பாளர்களை வற்புறுத்த இருக்கிறேன் என்கிறார் நளினி.