ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
மிகவும் வித்தியாசமான கதைகளத்துடன் எடுக்கப்பட்டு வரும் பிகே படத்திற்காக அமீர் கான், பல மாதங்களுக்கு முன்பிருந்தே தன்னை தயார்ப்படுத்தி வந்தாராம். இந்த படத்தில் போஜ்புரி மொழி முக்கிய இடம் வகிப்பதால், இந்த படத்திற்காக போர்ஜ்புரி மொழியையும் கற்றாராம் அமீர்கான். இந்த படத்தில் அவரது கேரக்டர் யதார்த்தமாகவும், நகைச்சுவை கலந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக சாந்தி பூஷண் என்ற போஜ்புரி டிவி எழுத்தாளரிடம் பிரத்யேகமாக போஜ்புரி மொழியை கடந்த 2 ஆண்டுகளாக பயின்று வந்தாராம்.
படத்தின் சூட்டிங்கின் இடையேயும், சூட்டிங் இல்லாத போதும் அமீர்கான் போஜ்புரி மொழியை கற்றுக் கொண்டாராம். இந்த மொழியை கற்றுக் கொள்வது கடினம் என்பதால் இதற்காக அவர் பெரும் முயற்சி மேற்கொண்டாராம். இது பற்றி சாந்தி பூஷணிடம் கேட்ட போது, விது வினோத் சோப்ரா அலுவலகத்தில் இருந்து ராஜூஜி ஹிரானி என்னை தொடர்பு கொண்டு விபத்தைச் சொன்னார். பிகே படத்தின் வசனங்களையும் கொடுத்து, இதனை போஜ்புரி இந்தி மொழிக்கு மொழி பெயர்த்து தர வேண்டும் என்றும், அது ரசிகர்களுக்கு புரியும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கூனார். வசனங்கள் தவிர பிரச்யேகமாக அமீர்கானுக்கு அவரது வீட்டிற்கு சென்று இந்த மொழியை நான் கற்றுக் கொடுத்தேன். இதனால் அந்த வசனங்களை எழுதவும், படிக்கவும் அமீர்கான் கற்றுக் கொண்டார். சந்தேகம் வரக் கூடும் என்பதால் என்னையும் சூட்டிங்கின் போது உடன் இருக்கும்படி கூறினார். மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் அமீர்கான் இதனை கற்றுக் கொண்டார்.
அவர் காரில் பயணம் செய்யும் போதும் நான் அவருடன் இருந்து இதனை கற்றுக் கொடுத்தேன். அமீருக்கு இந்த மொழி மிகவும் பிடித்திருந்தது. டிரைலரில் அவர் கூறும் துகர் துகர் என்ற வார்த்தை போஜ்புரியின் அவருக்கு பிடித்த வார்த்தை தான் என தெரிவித்துள்ளார்.