ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குனரும் தயாரிப்பாளருமான விது வினோத் சோப்ரா, இந்திய சினிமாக்கள் உலக தரத்திற்கு உயர்வதற்கு இந்திய இயக்குனர்கள் உலக சினிமாவை பார்க்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் இந்திய சினிமாத்துறை தொடர்ந்து முட்டாள் தனமான படங்களை தான் தயாரிக்கும் என கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற 16வது திரைப்பட விழாவில் கலந்து கொண்ட விது வினோத் சோப்ரா, நான் காஷ்மீரின் சிறிய கிராமத்திலிருந்து வந்தவன். நான் இந்தி படங்கள் மட்டுமே பார்த்துள்ளேன். நாம் உலக சினிமாப் படங்களை பார்க்காவிட்டால் எவ்வாறு வளர்ச்சி பெற முடியும்? எப்படி நல்ல சினிமா இயக்க முடியும்? நான் இன்று இரண்டு மூன்று இயக்குனர்களை சந்தித்தேன். அவர்கள் மக்களை தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வைத்துள்ளனர். அதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருந்தது.
உலக சினிமா தான் சிறந்தது என நான் நினைக்கவில்லை. சொல்லப் போனால் நமது பிராந்திய மொழி படங்களே சிறப்பாக எடுக்கப்படுகின்றன. அடிப்படையில் நமது சினிமாக்கள் உலக தரத்திற்கு நிகரானவை தான். ஆனால் அனைத்து சினிமாக்களுமே உலகத்தரத்திற்கு உயர வேண்டும் என்றே நான் விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.