ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தென்னிந்திய சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். அந்த வகையில் 2014-2017ம் ஆண்டுக்கான தேர்தல் அக்., 12ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் நடிகை நளினி, முன்னாள் தலைவர் ராஜேந்திரன், சிவன் சீனிவாசன் ஆகியோர் தனித்தனி அணி அமைத்து போட்டியிட்டனர். வாக்கு பதிவு முடிந்ததும் முக்கிய நிர்வாகிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் நடிகை நளினி தலைமையிலான அணியினர் பெருவாரியான வெற்றிகளை பெற்றனர். தலைவராக நளினியும், பொதுச் செயலாளராக நளினி அணியை சேர்ந்த பூ விலங்கு மோகனும், பொருளாளராக நளினி அணியைச் சேர்ந்த வி.டி.தினகரனும் வெற்றி பெற்றனர். அதன்படி தலைவராக நடிகை நளினி இன்று(அக்., 15ம் தேதி) முறைப்படி பதவியேற்று கொண்டனர். அவருடன் சேர்ந்து பூவிலங்கு மோகன் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகளும் பதவியேற்று கொண்டனர்.