டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திரைப்பட நடிகைகளின் சம்பளம் கோடியை நெருங்கியும், தாண்டியும் உயர்ந்திருப்பதைபோல சின்னத்திரை சீரியல் நடிகைகளின் சம்பளம் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்தை நெருங்கியும், தாண்டியும் உயர்ந்திருக்கிறது. சின்னத்திரை வரலாற்றில் முதன் முறையாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கியவர் கோலங்கள் தொடருக்காக தேவயானி. நடிகர்களின் கோடி சம்பளம் போல இந்த ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம்தான் சின்னத்திரை நடிகைகளின் லட்சியம்.
அந்த வரிசையில் இப்போது ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறவர் ராதிகா. சொந்த சீரியலில் நடிக்கும்போது ஒரு லட்சம் சம்பளத்தை சீரியலின் பட்ஜெட்டில் சேர்த்துக் கொள்வார். அதற்கு அடுத்த இடத்தில் குஷ்பு இருக்கிறார் 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை பெறுகிறார்.
ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால், மதுமிதா, சங்கவி ஆகியோருக்கு சினிமா ஹீரோயின் அந்தஸ்து இருப்பதால் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பெறுகிறார்கள். மகேஸ்வரி, பாரதி, ஸ்ருதி, ஷமிதா, சந்தோஷி, நிமா ஆகியோர் 25 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்கள்.
சினிமா நடிகையாக இருந்தாலும் சற்று வயதாகிவிட்ட நளினி, சுதா சந்திரன், சேது அபிதா, சுஜீதா, ப்ரீத்தி, ஸ்ரீத்திகா ஆகியோர் 15 ஆயிரம் வாங்குகிறார்கள். வடிவுக்கரசி, ஸ்ரீலேகா, சாந்தி வில்லியம்ஸ், வித்யா, வாணிபோஜன், மோனிகா மேக்னா, நிஷா, ஷப்னம் ஆகியோர் பத்தாயிரம் வரை சம்பளம் வாங்குகிறார்கள்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நடிகைகளின் சம்பளம் 15 முதல் 25 சதவிகிதம் வரை உயர்ந்திருப்பதாக சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.