'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தயாரிப்பாளர்கள் நடிகராவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. முதல் தமிழ் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சுப்பிரமணியம் ஒரு நடிகராக வாழ்க்கையை துவக்கியவர். பிரபல தயாரிப்பாளர் எல்.வி பிரசாத் பிற்காலத்தில் நடிகரானார். சாண்டோ சின்னப்பா தேவர் எம்.ஜி.ஆரோடு நடித்திருக்கிறார்.
ஏவி.மெய்யப்ப செட்டியார் முதல் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் வரை சினிமா திரையில் தலைகாட்டாத தயாரிப்பாளர்களும் உண்டு. ஆனால் சமீபகாலமாக தயாரிப்பாளர்கள் நடிக்க வருவது அதிகரித்திருக்கிறது. சில புதுமுகங்கள் சினிமாவுக்குள் நுழையும்போதே தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோ என எல்லா பொறுப்புகளோடும் நுழைவது தனிக் கதை. ஆனால் பல படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பாளர்கள் 50 அல்லது 60 வயதை கடந்த பிறகும் நடிகர்களாகிறார்கள்.
அன்பாலாயா பிரபாகரன், மோகன் நடராஜன், பிரமிட் நடராஜன், சங்கிலி முருகன், கே.ராஜன், சுந்தரா டிராவல்ஸ் தங்கராஜ் ஆகியோர் முன்பிருந்தே நடித்து வருகிறார்கள்.
அழகன் தமிழ்மணியை பாலா நான் கடவுள் படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்போது பாலா தாரை தப்பட்டை படத்தில் தயாரிப்பாளர் ஸ்டூடியோ 9 சுரேசை நடிகராக அறிமுகப்படுத்துகிறார். பசங்க படத்தில் பாண்டிராஜ் ஜெயபிரகாஷை அறிமுகப்படுத்தினார். இன்றுவரை வெற்றிகரகமான கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது பார்டனரான ஞானவேலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அறிந்தும் அறியாலும் உள்பட பல படங்களை தயாரித்த புன்னகை பூ கீதா நீயெல்லால் நல்லா வருவடா படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். வேலையில்லா பட்டதாரி படத்தில் அமலாபாலின் தந்தையாக நடித்து நடிகராகி இருக்கிறார் பைவ் ஸ்டார் கதிரேசன். ஜீவா படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தந்தையாக நடித்து அறிமுகமாகியிருக்கிறார் அம்மா கிரியேஷன்ஸ் சிவா.
ஐ படத்தின் மூலம் மீண்டும் நடிகராகியிருக்கிறார் சிவாஜி பிலிம்ஸ் ராம்குமார், விரைவில் பட்டியல் சேகர் ஒரு படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா, திருக்குமரன் எண்டர்டயின்மெண்ட் சி.வி.குமார், ஆகியோரும் நடிகர்களின் பட்டியலில் வர இருக்கிறார்கள்.
திரையில் தோன்றும் ஆசை 90 சதவிகிதம் பேருக்கு உண்டு. அதற்கு தயாரிப்பாளர்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல. படத் தயாரிப்பு என்பது ஆண்டு முழுவதும் இருக்கிற ஒன்றல்ல. ஒரு தயாரிப்பாளர் ஒரு படத்தை தயாரித்து விட்டு அடுத்த படத்துக்கு சிறிது இடைவெளிவிடுவார். அந்த இடைவெளியில் சினிமாவோடு தொடர்பில் இருக்க நடிக்க விரும்புகிகிறார்.
அதோடு இப்போது படம் இயக்க வரும் புதிய இயக்குனர்கள், தங்கள் தயாரிப்பாளர்களை கூல் பண்ண அவருக்கு ஒரு கேரக்டரை உருவாக்கி "உங்களைத் தவிர வேறு யாரும் நடிக்க முடியாது" என்ற பில்டப்பை கொடுத்து விடுவதால் தயாரிப்பாளர்கள் நடிக்க ஆரம்பிக்கிறார்கள். அதோடு நடிப்பது என்பது குறைந்த உழைப்பில் அதிகம் சம்பாதிக்கிற தொழில். முதல் போடாமல் லாபத்தை மட்டுமே அள்ளுகிற தொழில் நடித்து பார்ப்போம் ஜெயபிரகாஷ் மாதிரி கிளிக்கானால் பணம் கொட்டுமே என்று கணக்குப்போட்டு நடிகர்களாகிறார்கள்.
சினிமா என்பது ஒரு கடல் யார் வேணாலும் முழ்கி குளிக்கலாம் திறமை உள்ளவர்கள் மட்டுமே முத்தெடுக்க முடியும்!