துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
தமிழில் ரோஜா படத்தில் அறிமுகமாகி நிறைய படங்களில் நடித்தவர் மதுபாலா. அதன் பிறகு இந்திக்கு சென்றுவிட்டார். சமீபத்தில் வாய்மூடி பேசுவோம் படம் மூலம் ரீ-எண்ட்ரி ஆனார். மதுபாலா இந்தி பட அதிபர் ஆனந்த் ஷாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தனது 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளை ஏமாற்றி விட்டதாக குடும்ப நண்பரும், வைர வியாபாரியுமான ஜவேரி மீது மும்பை, போலீசில் மதுபாலா புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது: நாங்கள் பரம்பரை பரம்பரையாக வைர நகைகளை பாதுகாத்து வருகிறோம். அது எங்கள் குடும்பத்தின் எதிர்கால சேமிப்பாகும். இந்த வைர நகைகளை அவ்வப்போது புதுப்பிப்பது வழக்கம். எங்கள் குடும்ப நண்பரும், நகை வியாபாரியுமான ஜவேரி அதனை புதுப்பித்து தருவார். இந்த முறை அவரிடம் 5 கோடி மதிப்புள்ள நகையை கொடுத்தோம். அதற்கு பதிலாக அவர் 22 காரட் நகை தருகிறேன் கூடுதலாக ஒரு கோடி செலவாகும் என்றார். அதனை தர ஒப்புக் கொண்டோம். கொஞ்சம் கொஞ்சமாக 65 லட்சம் கொடுத்தோம். ஆனால் இதுவரை அவர் வைர நகைகளைத் தரவில்லை. அவர் ஏமாற்றிவிடுவரோ என்று அஞ்சுகிறோம். எனவே எங்கள் நகையை மீட்டுத்தர கேட்டுக் கொள்கிறோம். என்று அந்த மனுவில் கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.