ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் அழகான நடிகை மட்டுமல்ல நம்பர் ஒன் நடிகை என்றும் கூறப்படுபவர் கத்ரினா கைப். இதனாலேயே பாலிவுட் திரையுலகத்தினர் அவரை செல்லமாக பார்பி பொம்மை என்றே அழைக்கிறார்கள். தப்போது பேங் பேங் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் அதிக அளவிலான வரவேற்பை பெற்றுள்ள கத்ரினா, படத்தில் தனது கேரக்டர் மற்றும் மக்கள் ஆதரவு பற்றிய தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பேட்டியில் அவர் கூறியதாவது :
* நூறு சதவீதம் திருப்தி....
தூம் 3 படத்தில் மிகச் சிறிய வேடத்தில் நடித்தேன் என ரசிகர்கள் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக பேங் பேங் படத்திலும் அத்தகைய நிலையே எனத ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கும். ஏனெனில் இந்த படத்தின் இரண்டாவது பாதியில் மிகக் குறைந்த சீனிலேயே நான் நடித்துள்ளேன். இருந்தாலும் எனது கேரக்டர் மற்றும் வேலையில் நான் நூறு சதவீதம் திருப்தியாக உணர்கிறேன். இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடையே எனக்கு இருந்து வரவேற்பு அதிகரித்திருப்பது பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
* அனைத்து படங்களும் சவால்கள்...
தூம் 3 படத்தை போன்று பேங் பேங் படமும் ஆக்ஷன் படம். பெரிய பட்ஜெட் படம். நான் நடிக்கும் அனைத்து படங்களையும் சவாலாக தான் நினைக்கிறேன். ஒவ்வொரு படமும் வித விதமான சவால்கள் தான். தூம் 3 பிஸிகலான சவாலாக இருந்தது. ஆனால் தூம் 3 படத்துடன் ஒப்பிடுகையில் பேங் பேங் படத்தில் எனக்கு பிஸிக்கல் சவால் குறைவாகவே இருந்தது. எனது பணியை சிறப்பாக செய்வதற்காக நான் எப்போதுமே என்னை சவால்கள் நிறைந்ததாக மாற்றிக் கொள்கிறேன்.
* ஆக்ஷன் தான் பேங் பேங் படத்தின் அழகு....
பேங் பேங் படத்தின் கதை முற்றிலும் வித்தியாசமானது. ஆனால் என்னைக் கேட்டால் ஆக்ஷன் சீன்கள் தான் பேங் பேங் படத்தின் அழகு என்று சொல்லுவேன். ஏனெனில் இதில் ஆக்ஷனே வித்தியாசமாக கையாளப்பட்டுள்ளது. பாலிவுட் திரையுலகே இது போன்ற ஆக்ஷன் சீன்களை பார்த்திருக்க முடியாது. இந்த படத்தில் ஆக்ஷன் சீன்களில் நடிப்பதற்கு நான் 15 முதல் 16 நாட்கள் எடுத்துக் கொண்டேன். அந்த சீன்கள் அவ்வளவு கடினமாக மட்டுமல்ல வித்தியாசமாகவும் இருந்தது.
* எளிமையான கதை...
பேங் பேங் படத்தில் ஹிருத்திக் ரோஷன், ராஜ்வீர் கேரக்டரில் நடித்துள்ளார். அவருக்கு ஒரு விறுவிறுப்பான கேரக்டர். நான் ஹர்லீன் கேரக்டரில் நடித்துள்ளேன். அவளின் கதை மிக எளிமையான கதை. ஹர்லீன் வங்கியில் வேலை செய்பவள். கடினமான பாதைகளை கடந்து வந்த அவளுக்கு பாய்பிரண்ட் கிடையாது. அவளுக்கு இந்த உலகை சுற்றி பார்க்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. ஆனால் அவளிடம் அதற்கான பணம் இல்லை. பெற்றோரை இழந்த அவள் தனது பாட்டியுடன் வசித்து வந்தாள். அதனால் அவளின் கதை மிக எளிமையானது.
* நம்பர் ஒன் ஆக விரும்பவில்லை...
மிக அடிமட்டத்தில் இருந்து நான் எனது திரையுலக வாழ்க்கையை துவங்கினேன். இன்று ஒரு முன்னணி நடிகையாக உள்ளேன். தற்போது நான் மிக உயந்த நிலையில் இருக்கிறேன். இன்று எனது பெயர் பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் நம்பர் ஒன் நடிகை ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் நடிக்க வரவில்லை. நான் விரும்பியது எல்லாம் புகழ்பெற்ற நடிகையாக வர வேண்டும், அனைவரின் அன்பையும் பெற வேண்டும், இந்திய ரசிகர்களின் ஆதரவை பெற வேண்டும் என்று மட்டும் தான் விரும்பினேன். ஹேமாமாலினிக்கு கிடைத்ததை போன்ற அபிமானத்தை ரசிகர்களிடம் இருந்து பெற வேண்டும் என நினைக்கிறேன். ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொண்டு, நேசிப்பது எனக்கு சந்தோஷத்தை தருகிறது.
* எங்கள் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் விரும்பவில்லை...
ஹிருத்திக் ரோஷன் மற்றும் என்னுடைய கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அது பற்றி நான் ரசிகர்களுக்கு விளக்க விரும்புகிறேன். அந்த கெமிஸ்ட்ரி எனக்கும் ஹிருத்திக்கிற்கும் இடையே ஆனது இல்லை. அவை அந்த படத்தில் வரும் கேரக்டரான ராஜ்வீர் மற்றும் ஹர்லீன் இடையேயானது மட்டுமே. ஆனால் எங்களின் கேரக்டர்களுக்கு கிடைத்துள்ள இந்த வரவேற்பின் பாராட்டுக்கள் அனைத்தும் எனக்கோ ஹிருத்திக்கிற்கோ உரியது இல்லை. அது எங்கள் டைரக்டரை தான் சேரும்.
இவ்வாறு கத்ரினா கைப் தெரிவித்துள்ளார்.