பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஐ.நா சபையை சேர்ந்த கலை மற்றும் கலாச்சார குழுவினர், உலகம் முழுவதும் பெண்கள் சினிமாவில் எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது பற்றி 4 ஆண்டுகள் ஆய்வு செய்தார்கள். அதன் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய சினிமாவில் 95 சதவிகித பெண்கள் கவர்ச்சிக்காகவே பயன்படுத்தப்படுகிறார்கள். கிளாமர் காட்டுவதற்கென்றே ஹீரோயின்களை தேர்வு செய்கிறார்கள். அவர்களுக்கு கதையில் எந்த முக்கியத்துவமும் இல்லை.
வித்யாபாலன், ப்ரியங்கா சோப்ரா போன்ற நடிகைகளில் நல்ல கேரக்டர்களில் நடித்தாலும் அடிப்படையில் அவர்களின் கவர்ச்சியே முன் வைக்கப்படுகிறது. நல்ல நடிகைகளின் கவர்ச்சி குறையும்போது அதனை புதுமுகங்களை வைத்து ஈடுகட்டுகிறார்கள். இந்த தகவல்கள் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையெல்லாமா ஆய்வு செய்வார்கள் என்ற பெரூமூச்செல்லாம் வேண்டாம். அறிக்கையில் சொல்லப்படும் உண்மையை உணரவேண்டும்.