ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கிளீன் இந்தியா திட்டத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான் கான், ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்டோரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து கொண்டு இந்தியா திரும்பிய மோடி, டில்லியில் கிளீன் இந்தியா எனும், நாடு முழுவதையும் தூய்மைப்படுத்தும் திட்டத்தை துவக்கி வைத்தார். கையில் துடைப்பம் ஏந்தி அவரும் சுத்த பணியில் ஈடுபட்டார். பின்னர் விழாவில் பேசிய மோடி, மகாத்மா காந்தி இந்த நாடு முழுவதும் தூய்மையடைய வேண்டும் என விரும்பினார். அவரது கனவு நிறைவேறாமல் போனது. இந்த கனவை நாம் நிறைவேற்றுவோம். இந்த அரும் பெரும் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
பிரபலங்களுக்கு மோடி அழைப்பு
மேலும் இந்த திட்டத்தில் சச்சின், கமல்ஹாசன், சல்மான் கான், நடிகை ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்டோரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் மோடி.
க்ளீன் இந்தியா திட்ட தூதரானார் அமீர்
க்ளீன் இந்தியா திட்டத்தின் தூதராக பாலிவுட் நடிகர் அமீர்கான் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இன்றயை நிகழ்ச்சியில் மோடியுடன் அவரும் பங்கேற்று, இத்திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு இந்தியனும் இந்த திட்டத்தில் பங்கேற்க வேண்டும். இந்ததிட்டத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
மோடி அழைப்பு - ப்ரியங்கா ஏற்பு
மோடியின் அழைப்பிற்கு நடிகை ப்ரியங்கா சோப்ரா சம்மதம் சொல்லியிருக்கிறார். இது வரவேற்கப்பட வேண்டிய செயல், இப்படி ஒரு திட்டத்தில் நானும் இணைவது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசன் ஏற்பாரா.?! : இந்த திட்டத்தில் பங்கேற்கும் படி கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மோடி. ஏற்கனவே நம்மவர் படத்தில்,''சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள பூமிதான்...'' என்ற பாடலை பாடியபடி நடித்த கமல்ஹாசன், பிரதமரின் கோரிக்கையை ஏற்பாரா.? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.