ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பசங்க படத்திற்கு பிறகு குழந்தைகளை மையமாக கொண்ட சினிமாக்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. கோலிசோடா பெரிய வெற்றி பெற்றது. சமீபத்தில் புதியதோர் உலகம் செய்வோம் என்ற படம் வெளிவந்தது. தற்போது கத சொல்லப் போறோம் என்ற படம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. எஸ்.கல்யாண் என்பவர் தயாரித்து இயக்குகிறார். ஷிபானா, ரவீணா, அருண் அரவிந்த், அரவிந்த், ராகுல், சாமு, அர்ஜுன் என்ற குழந்தை நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அவர்களுடன் ஆடுகளம் நரேன். காளி வெங்கட், பசங்க சிவகுமார் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.
படத்தை பற்றி இயக்குனர் எஸ்.கல்யாண் கூறியதாவது: முதல் படமாக குழந்தைகள் படத்தை இயக்குவது ஆபத்தானது என்பார்கள். நான் துணிச்சலுடன் இயக்குகிறேன். காரணம் இதற்கு முன்பு 6 குழந்தைகள் பற்றிய குறும்படம் இயக்கிய அனுபவம் இருக்கிறது.
குழந்தைகள் பற்றி நிறைய படங்கள் வந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் சென்மென்ட் பற்றி வரவில்லை. இது குழந்தைகளின் சென்டிமென்ட் பற்றிய கதை. ஒரு அநாதை இல்லக் குழந்தைகளுக்கும், அருகில் வசிக்கும் பணக்கார குழந்தைகளுக்கும் இடையே உள்ள நட்பு, பாசம் பற்றி பேசும் படம். அதோடு குழந்தைகள் கடத்தல் பற்றிய ஒரு அதிர்ச்சி தகவலையும் படத்தில் பதிவு செய்கிறோம். என்கிறார் இயக்குனர் எஸ்.கல்யாண்.