‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்தவேளை, உற்சாகம் படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் நட்பதிகாரம் 79. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்த ராஜ் பரத், வல்லினம் படத்தில் நடித்த அம்ஜத்கான் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். ரேஷ்மி, தேஜஸ்வி ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இந்த படம் ரவிசந்திரன் இயக்கிய கண்ணெதிரே தோன்றினாள் படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் கூறியதாவது: கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் நட்பையும், காதலையும் சொல்லியிருந்தேன். நட்பதிகாரத்தில் நட்பையும், காதலையும் உள்ளடக்கி இரு குடும்பங்களுக்கான உறவை பதிவு செய்திருக்கிறேன். மற்றபடி கண்ணெதிரே தோன்றினாள் கதைக்கும், இதற்கும் தொடர்பில்லை. இரண்டாம் பாகமும் இல்லை.
மஜ்னு படத்தில் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை அறிமுகப்படுத்தினேன். இந்தப் படத்தில் தீபக் நிலம்பூரை அறிமுகப்படுத்துகிறேன். அவர்போலவே இவரும் புகழ்பெறுவார். மைசூர், பெங்களூர் பகுதியில் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறேன். என்றார் ரவிச்சந்திரன்.