Advertisement

சிறப்புச்செய்திகள்

ஷங்கர் இல்லத் திருமண விழாவில் சங்கீதா விஜய் | 'கண்ணப்பா' படத்தில் அக்ஷய்குமார் | 'விசில் போடு' : யுவன் - அனிருத் ரசிகர்கள் மோதல் | தேர்தல் இருந்தால் என்ன? - வருகிறது புதிய படங்கள்…! | புதிய சாதனை படைத்த 'விசில் போடு' | விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட் பிரபலங்களின் நவராத்திரி அனுபவம்

02 அக், 2014 - 15:29 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட் நடிகர்கள் பலர் அவர்களின் நவராத்தி அனுபவங்களை அங்கே பகிர்ந்து கொண்டுள்ளனர்.


திவ்யன்கா திரிபாதி : நவராத்திரி எனக்கு மிகவும் பிடித்தது. நான் சந்தோஜமாகக் கொண்டாடும் பண்டிகை அது. நவராத்திரி சமயங்களில் நான் வீட்டில் இருந்தால் கண்டிப்பாக நவராத்தியில் கலந்து கொள்வேன். அங்கு நடனம் ஆடுவதும் எனக்கு பிடிக்கும். அந்த பண்டிகையின் சூழ்நிலை எனக்கு பிடித்தமான ஒன்று. எனக்கு அது நல்ல எண்ணங்களை ஏற்படுத்தும். அந்த மொத்த சூழலே உற்சாகத்தை அளிக்கும்.

ஸ்நேகா வாக் : நவராத்திரி, உண்மையிலேயே நமக்கு சிறப்பானதாகும். என் அம்மா வீட்டில் தேவியை ஸ்தாபித்து பூஜை செய்வார். நான் அவரைப் போன்று விரதம் இருந்ததில்லை. ஆனால் நான் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருப்பேன். பூஜைகளுக்கு நேரம் ஒதுக்க விரும்புகிறேன். கோரா கேந்திரா கோவிலுக்கு செல்ல நினைக்கிறேன். அவ்வாறு போகும் போது என் சகோதரிக்காக சானியா சோலி வாங்கி வர நினைக்கிறேன்.


டீனா தத்தா : என்னை பொறுத்த வரை நவராத்தி என்றாலே துர்க்கா பூஜை தான். புது ஆடைகள் உடுத்தி, துர்க்கா பூஜையின் போது பெரும்பாலான நேரத்தை என் நண்பர்களுடனும், குடும்பத்துடனும் செலவிடுவேன். இந்த ஆண்டும் நான் கொல்கட்டா செல்ல நினைத்துள்ளேன். துர்க்கா பூஜையின் போது செல்வதற்கான சிறந்த இடம் கோல்கட்டா. பக்தியுடன் பிரசாதமும் பகிர்ந்து கொள்வது சந்தோஷமான அனுபவம். அஷ்டமியின் போது சாந்தி பூஜையிலும் நான் கலந்து கொள்வது வழக்கம்.


ரூபல் தியாகி : அதிக நாள் கொண்டாடும் உற்சாகமான பண்டிகை என்பதால் நவராத்திரி சிறப்பான பண்டிகை. உற்சாகத்துடன் வழிபாடும் கலந்து ஒரே நேரத்தில் கொண்டாடப்படும் பண்டிகை. நான் வீட்டில் சிறிய அளவிலேயே பூஜை செய்வேன். ஆனால் தென்னிந்தியாவைப் போன்று விரிவாக பூஜை நடத்த எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு விரதத்தில் நம்பிக்கை இல்லை. தினமும் 13 முதல் 14 மணி நேரம் வரை சூட்டிங் இருப்பதால் டாண்டியாவிற்கு செல்ல முடியவில்லை. ஆனால் கடவுள் அருளால் ஓரளவு சமாளித்துக் கொண்டு 2 நாட்கள் மட்டும் டாண்டியாவிற்கு கண்டிப்பாக செல்வேன். டிசைனராக இருக்கும் எனது நண்பர் மூலம் ஏற்கனவே அழகான குஜராத்தி ஸ்டைல் லெகங்கா வாங்கி விட்டேன். கொண்டாட்டத்திற்கு அது சரியாக இருக்கும்.


ஹிம்மான்சூ அசோக் மல்கோத்ரா : அளவில்லா உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் அள்ளித்தரும் பண்டிகை நவராத்திரி.சுவையான உணவுகளுடன் கொண்டாடும் அற்பதுமான பண்டிகை. நடனம், குறிப்பாக மும்பை மற்றும் குஜராத்தில் டாண்டியாவிலும் கொண்டாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்வார்கள். எதிர்பாராத விதமாக நான் டில்லியில் சூட்டிங்கில் இருப்பதால் இந்த ஆண்டு என்னால் மும்பையில் இருக்கு முடியவில்லை. நான் விரதம் இருப்பதில்லை. ஆனால் என் அம்மா 9 நாட்களும் விரதம் இருப்பார். எங்களுக்கு அவர் விதித்திருக்கும் ஒரே கட்டுப்பாடு நவராத்திரி சமயத்தில் அசைவம் சாப்பிட கூடாது என்பது மட்டும் தான். அதனால் அம்மா என்ன சொல்கிறாரோ அதை செய்கிறோம்.


அர்ஜூன் பிஜ்லானி : நவராத்திரி பண்டிகை எனக்கு மிகவும் முக்கியமானதாகும். நானும் என் மனைவியும் நவராத்திரியின் 9 நாட்களில் ஒருமுறையாவது கோயிலுக்கு சென்றுவிட்டு வருவோம். எல்லா வருடங்களைப் போலவும் இந்த ஆண்டும் விதிமுறைகளை கடைபிடித்து அசைவம் சாப்பிடாமல் இருக்கப் போகிறேன். மேலும் குடும்பத்துடன் கோயிலுக்கும் செல்ல உள்ளேன். எனது குடும்பத்துடன் நவராத்திரியை கொண்டாடுகிறேன். விரதம் இருக்க மாட்டேன். ஆனால் 9 நாட்களும் அசைவம் சாப்பிட மாட்டேன். நவராத்திரிக்கு முன் வீட்டில் பெட்ஷீட் முதல் அனைத்தையும் மாற்றி சுத்தம் செய்தோம். என் குடும்பத்தினர்களுக்காக ஆடைகள் வாங்கி உள்ளேன்.


அன்கித் கீரா : நவராத்திரியின் 9 நாட்களும் எனக்கு சிறப்பு தான். எனது இடத்தை சுத்தம் செய்வேன். 9 நாட்களும் விரதம் இருக்க மாட்டேன். ஆனால் இரண்டாவது மற்றும் கடைசி நாட்கள் மட்டும் விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என முயற்சிப்பேன். என் வீட்டில் உள்ள பூஜை அறையை மலர்களால் அலங்கரிப்பேன். பொதுவாக நவராத்திரியின் 9 நாட்களும் ஹேர் கட் செய்யவோ ஷேவ் செய்யவோ மாட்டோம். ஆனால் எனது தொழில் காரணமாக அவைகளை செய்ய வேண்டி உள்ளது. இந்த ஆண்டு ஒரு முறையாவது மகாலட்சுமி கோயிலுக்கு செல்ல வேண்டும் என நினைத்துள்ளேன். நவராத்திரியின் 9 நாட்களும் நான் அசைவம் சாப்பிட மாட்டேன். இந்த ஆண்டு சூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் நவராத்திரியை வீட்டில் கொண்டாட முடியாது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in