ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
1998ல் இருந்து அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றியவர் பார்த்தி. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது அவரது சின்ன வயது கனவாம். அதனால் நாசாவில் இருந்து வந்து விட்ட அவர், விஞ்ஞானி என்ற படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் மீராஜாஸ்மின் நாயகியாக நடிக்க, தலைவாசல் விஜய் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறாராம். மேலும், இரண்டு ஹீரோயின்களும் இருக்கிறார்களாம்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை 5 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. அப்போது விஞ்ஞானி பார்த்தி பேசும்போது, நாசாவில் விஞ்ஞானியாக இருந்ததில் எனக்கு புல் பீல் கிடைக்கவில்லை. அதனால் சின்ன வயசு கனவை நிறைவேற்றுவதற்காக சினிமாவுக்கு வந்தேன். நான் உருவாக்கிய ஒரு கதையை சிலருடன் இணைந்து ஸ்கிரிப்டாக்கினேன். அதையடுத்து அவர்களின் உறுதுணையுடன் இந்த படத்தை இயக்கி, நானே ஹீரோவாகவும் நடித்திருக்கிறேன்.
இந்த படத்தில் மீராஜாஸ்மின் ஹீரோயினாக நடித்திருக்கிறார். துடுக்குத்தனமான ஒரு தமிழ் டீச்சராக அவர் நடித்துள்ளார். அவருக்கு ரன், சண்டக்கோழி படங்களை விட இந்த படம் சிறந்ததாக இருக்கும். பாடல் காட்சிகளில் நடனமாடும்போது அவர் எனக்கு டிப்ஸ் கொடுத்தார். அதேபோல் தலைவாசல் விஜய், க்ளோசப் காட்சிகளில் கண்ணை சிமிட்டாமல் நடிக்க வேண்டும் என்று சில டிப்ஸ்களை கொடுத்தார். அது எனக்கு பெரிய பயனாகவும் இருந்தது.
மேலும், இந்த படத்தை படமாக்க நினைக்கும்போது நம்மிடம் உள்ள பொக்கிஷத்தை கதையாக்க நினைத்தேன். அந்த வகையில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காட்சிகளை அப்போதைய லொகேஷனை உருவாக்கி படமாக்கியிருக்கிறேன். குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் ஒருவர், 3 ஆயிரம் வருடத்துக்கு முந்தைய பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறார். இது இன்னமும் தமிழ்நாட்டில்கூட நிறையபேருக்கு தெரியாது. ஆனால் வெளிநாட்டில் இருந்து சிலர் வந்து அந்த பொருட்களை ஆராய்ச்சி செய்து டாக்டரேட் பட்டம் வாங்கிக்கொண்டு வருகிறார்கள்.
இப்படி நமக்குள் எவ்வளவோ அறிய தகவல்கள் உள்ளன. அதையெல்லாம் இந்த படத்தில் வெளிகொண்டு வந்து, அனைவரையும் நமக்குள் இவ்வளவு அற்புதங்கள் இருக்கிறதா என்று வியக்க வைக்கப்போகிறேன். இந்த படத்தைப்பார்த்து நான் தமிழன்டா என்று அனைவருமே காலரை தூக்கி விடலாம் என்று சொல்லும் பார்த்திக்கு, தொடர்ந்து படம் இயக்குவதை விட, ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாம். இந்த படத்தில் ஜனத்தொகையைப்பற்றி சொல்லியிருப்பவர், அடுத்தடுத்து படங்களில் நாட்டுக்குத் தேவையான இன்னும் பல நல்ல கருத்துக்களுடன் மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.