தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஸ்வீட் அண்ட் க்யூட் நடிகையான பாலிவுட்டின் இளம் நடிகை சாரதா கபூர், ஹைடர் ரிலீஸ்க்காக மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார். இந்த உலகத்திலேயே தான் மிகவும் அதிர்ஷ்டசாலியான நடிகை என்று கூறியுள்ளார். எதற்காக அவர் அப்படி சொன்னார் என்பதை இங்கு அவரே மேலும் விரிவாக கூறுகிறார். இதோ...
டிரைலருக்கு நல்ல வரவேற்பு
இதுவரை நான் நான்கு படங்களில் நடித்துள்ளேன். ஹைடர் எனது ஐந்தாவது படம். இருந்தாலும் இந்தப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம், ஏனென்றால் இதற்கு முன் நான் நடித்த படங்களை விட முற்றிலும் வித்தியாசமானது இப்படம். மேலும் இப்படத்தின் டிரைலருக்கே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, இன்னும் முழுபடத்தையும் ரசிகர்கள் பார்த்தால் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்று எண்ணி பார்க்கிறேன். இதுவரை நான் நடித்த படங்களில் ஹைடர் படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு, வேறு எந்த படத்திற்கும் ஏற்பட்டது இல்லை.
என்னை நானே ஆச்சர்யப்பட்டேன்
ஹைடர் படத்தில் ஷாகித் கபூர் மற்றும் எனது ரோல் பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை, அப்படி ஒரு ரோல் எனக்கு கிடைத்துள்ளது. படம் மற்றும் படத்தின் புரொமோஷன்களை பார்த்துவிட்டு, இது நான் நடித்த படம் தானா என்று ஆச்சர்யப்பட்டேன், காரணம் அந்தளவுக்கு நான் நடித்துள்ளேன். இவை அனைத்திற்கும் காரணம் இயக்குநர் விஷால் தான். பாலிவுட் சினிமாவில் மிகவும் ஆச்சர்யமான இயக்குநர் விஷால், அவரது படத்தில் நடித்தது மகிழ்ச்சி. அந்தவகையில், இந்த உலகத்திலேயே நான் தான் அதிர்ஷ்டக்கார நடிகை.
படப்பிடிப்புக்கு முன்பாகவே சென்றேன்
ஹைடர் படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்தபோது, ஷூட்டிங் நடப்பதற்கு மூன்று-நான்கு நாட்களுக்கு முன்னதாகவே நான் காஷ்மீர் சென்றுவிட்டேன். எனது இயக்குநர் தான் முன்னாடியே சென்று அங்கு நிலவும் சூழ்நிலைகள், அங்கு வாழும் மக்கள் எப்படிப்பட்டவர்கள், எப்படி பேசுகிறார்கள், அவர்களது உணவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள சொன்னார். அவர் சொன்னபடியே எல்லாவற்றையும் உள்வாங்கி, இந்தப்படத்தில் என்னால் எவ்வளவு சிறப்பான நடிப்பை கொடுக்க முடியுமோ, அவ்வளவு சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளேன்.
எனது அப்பா மிகுந்த எதிர்பார்ப்பு
எனது அப்பா, என்னுடைய எல்லா படத்தையும் ஆவலோடு எதிர்பார்ப்பார், ஆனால் ஹைடர் படத்தை கொஞ்சம் அதிகப்படியாகவே எதிர்பார்க்கிறார். எனது அப்பா என்னிடம் சொன்னது, கடவுள் உனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார், அதை சரியாக பயன்படுத்தி கடுமையாகவும், உண்மையாகவும் உழைத்து முன்னேறு, ஒருசிலருக்கு மட்டும் தான் இதுபோன்று வாய்ப்பு அமையும், ஆகையால் உனக்குரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள் என்றார்.
இப்போதும் துடிப்புடன் தபு
ஹைடர் படத்தில், விஷால், கே.க., தபு, உள்ளிட்ட பெரிய நடிகர்களுடன் நடித்துள்ளேன், அதிலும் குறிப்பாக தபுவின் நடிப்பு இன்றும் அதே துடிப்புடன் இருக்கிறது. அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. எப்பவும், நான் அவரை உற்றுநோக்கி, அவரை போன்று நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்வேன், கேமராவுக்கு முன்னால் மட்டுமல்ல, கேமராவுக்கு பின்னாடியும் ஒரு ஆச்சர்யமான நடிகையாக தபு திகழ்கிறார்.
ஹைடர் - பேங் பேங் முற்றிலும் வித்தியாசமானது
ஒரே நாளில் ஹைடர் படமும், பேங் பேங் படமும் ரிலீசானலும், இரண்டு படங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நானும், ஹிருத்திக் ரோஷனின் தீவிர ரசிகை தான், அவரது பேங் பேங் படத்தை நானும் காண ஆவலாய் இருக்கிறேன்.
எனது அம்மா நேர்மையான விமர்சகர்
எனது படங்கள் என்றாலும் என் அம்மா, அதில் உள்ள நிறை-குறைகளை சுட்டிக்காட்டுவார், அந்தவகையில் அவர் ஒரு நேர்மையான விமர்சகர். ஹைடர் படத்தின் புரொமோவை பார்த்துவிட்டு, என்னிடம் இந்த மாதிரி ரோலில் என் பொண்ணு நடிப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.
ப்ரியங்கா சோப்ரா தான் எனது ரோல் மாடல்
ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நடிகையை பிடிக்கும், அதேப்போல் நடிகைகள் ஒவ்வொருவருக்கும் ஒருவர் ரோல் மாடலாக இருப்பர், எனக்கு ப்ரியங்கா சோப்ரா தான் ரோல் மாடல். தனது கடுமையான உழைப்பால் சிகரம் தொட்டவர் ப்ரியங்கா, அவரைப்போன்று நானும் இருக்க வேண்டும் என்று எண்ணியதுண்டு. நான் அவரது நண்பராக வேண்டும் என்று நினைக்கிறேன், எனக்குள் ஒரு உத்வேகத்தை கொடுத்தவர் அவர்.
இவ்வாறு கூறியுள்ளார் சாரதா கபூர்.