வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழில் ரா ரா, சந்தமாமா படங்களில் நடித்த சுவேதா பாசு, ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். குற்றத்தை ஒப்புகொண்டதாலும், முதல் குற்றம் என்பதாலும் அவர் 6 மாதங்கள் மறுவாழ்வு இல்லத்தில் தங்கி இருக்க வேண்டும் என்றும், அங்கு அவருக்கு மனநல பயிற்சியும், கவுன்சிலிங்கும் கொடுக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி சுவேதா பாசு மகளிர் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார். இதனை எதிர்த்து சுவேதா பாசுவின் தாயார் கோர்டில் மனுதாக்கல் செய்தார்... "என் மகளை நாங்கள் நன்றாக பார்த்து கொள்கிறோம் அவள் விருப்பத்துக்கு மாறாக அவளை மறுவாழ்வு மையத்தில் அடைத்து வைத்திருப்பது அவளது அடிப்படை உரிமையை பறிப்பதாகும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர் 6 மாதம் மறுவாழ்வு இல்லத்திலிருந்து மறுவாழ்வுக்கான ஆலோசனைகளை பெற வேண்டும். எனவே அவரை விடுவிக்க முடியாது என்ற கூறி மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. இதைத் தொடர்ந்து செசன்ஸ் கோர்ட்டில் முறையிட முடிவு செய்துள்ளனர்