டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிலர்தான். அவர்களால்தான் திரையுலகம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்று சொல்லும் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் ரஜினிகாந்த். இவர் என்று சூப்பர் ஸ்டாராக உருவானாரோ அன்றிலிருந்து இன்று வரை இவருடைய படங்கள் வெளிவந்தால் வினியோகஸ்தர்கள் முதல், தியேட்டர்காரர்கள் வரை லாபத்தைப் பார்த்து கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள்.
இவர் நடித்து சில வருடங்களுக்கு முன் வெளிவந்த 'பாபா' திரைப்படம் படுதோல்வியடைந்தது. வெளியீட்டிற்கு முன் அந்தப் படம் நல்ல விலைக்கு விற்கப்பட்டது. படம் எதிர்பாராத தோல்வியடைந்ததால் வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் பெரிதும் நஷ்டமடைந்தனர். அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்களை வரவழைத்து அந்த நஷ்டத் தொகையைக் கொடுத்தார். அதற்கடுத்து அவர் நாயகனாக நடித்த 'சிவாஜி, எந்திரன்' படங்கள் வசூலில் சாதனை புரிந்தன. இடையில் வந்த 'குசேலன்' படத்தில் ரஜினி கௌரவத் தோற்றத்தில்தான் நடித்தார்.
'பாபா' படத்தின் நஷ்டத்தை ரஜினிகாந்த் சரிக்கட்டியது போன்று தெலுங்கில் தற்போது மகேஷ்பாபு ரஜினியின் வழியைப் பின்பற்றி வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத் தொகையைக் கொடுத்து சரிக்கட்டியிருக்கிறார். மகேஷ்பாபு, தமன்னா மற்றும் பலர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'ஆகாடு' திரைப்படம் படுதோல்வியடைந்தது. படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் பெரிதும் நஷ்டப்பட்டனர். அதையடுத்து அவர்கள் இனி வரும் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.
வினியோகஸ்தர்களின் நஷ்டம் பற்றி அறிந்த மகேஷ் பாபு அவர்களை அழைத்து, தன்னுடைய சம்பளத்திலிருந்து பெரும் தொகையை அளித்தார் என டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஆகாடு' படத்திற்காக மகேஷ் பாபு சுமார் 20 கோடி வரை சம்பளம் வாங்கியதாகச் சொல்கிறார்கள். அதில் அவர் எவ்வளவு தொகையை அவர்களுக்குத் தந்தார் என்பது ரகசியமாகவே உள்ளது.
மகேஷ் பாபுவின் இந்த செயலை வினியோகஸ்தர்கள் பெரிதும் பாராட்டி வருகிறார்களாம். ஆனால், மற்ற ஹீரோக்கள் இது வேண்டாத வேலை என்று குமுறுவதாகவும் தெரிகிறது.