மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
எண்பதுகளில் பிரபலமாக இருந்த நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளத்தில் பிரபல கதாநாயகியாக இருக்கிறார். 2000 ஆம் ஆண்டு பைலட் என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கீதாஞ்சலி மலையாள படத்தில் நாயகியாக அறிமுகமானார். ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தற்போது தமிழுக்கும் வந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே, கீர்த்தி சுரேஷுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தற்போது தமிழில் மானே தேனே பேயே என்ற படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதை அடுத்து, 2013 ஆம் ஆண்டின் சூப்பர்ஹிட் திரைப்படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கூட்டணி ரஜினி முருகன் படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கிறது. இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க முதலில் லக்ஷ்மி மேனன், தமன்னா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
அண்மையில் வெளியான செய்திகளின் அடிப்படையில் ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக தமன்னா நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது மலையாள நடிகை கீர்த்தி சுரேஷை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்! இதுகுறித்து அதிகாரபூர்வ அறவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரவிருக்கிறது. மதுரையைக் களமாகக் கொண்டு உருவாகும் ரஜினி முருகன் படத்தின் படப்படிப்பு நவம்பர் மாத இறுதியில் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் துவங்க உள்ளது.