பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
2012-ல் இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் வெளியான படம் கஹானி. அப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதையடுத்து, சித்தார்த்ராய் கபூரை திருமணம் செய்து கொண்டார். அப்போதே அவருக்கு 34 வயதாகியிருந்ததால் அதையடுத்து வித்யாபாலன் நடிப்புக்கு முழுக்குப்போட்டு விட்டு முழுநேர இல்லத்தரசியாகி விடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், திருமணம் எனக்கு ஒரு தடையே இல்லை என்று மறுபடியும் தன்னை மையப்படுத்தும் கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார் வித்யாபாலன். அதனால் கஹானியைத் தொடர்ந்து பெராரி கி சவாரி, பம்பாய் டாக்கீஸ், கன்சக்கார் என பல படங்களில் நடித்த வித்யாபாலன் தற்போது ஷாதி கி சைட் எபக்ட், பாபி ஜசூஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அதனால் அடுத்தபடியாகவும் ஹீரோயினை மையப்படுத்தும் கதைகளாக நடிப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இந்த நேரத்தில் மேரிகோம் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இப்போது பாலிவுட்டில் தனிப்பெரும் நாயகியாக வளர்ந்து கொண்டிருக்கிறார். இதனால் அடுத்தபடியாக இந்தியாவின் முதல் பெண் உயர் போலீஸ் அதிகாரியான கிரண்பேடி வேடத்தில் நடிக்கவும் பிரியங்கா சோப்ராவுக்காகத்தான் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இதனால் தனக்கான இடத்தை பிரியங்கா சோப்ரா கைப்பற்றி விடுவாரோ என்று அதிர்ச்சியில் காணப்படுகிறாராம் வித்யாபாலன்.