‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தேவதை, அரங்கேற்றம் தொடர்களில் நடித்து வருபவர் சஞ்சனா. பெங்களூர் பொண்ணு. தற்போது இளைஞர்கள் சிலர் உருவாக்கிய ஒரு விழிப்புணர்வு குறும்படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: தேவதை தொடரில் மட்டும் நடித்தபோது நிறைய நேரம் கிடைத்தது. அதனால் நடித்து முடித்து விட்டு பெங்களூருக்கு ஓடிவிடுவேன். இப்போது அரங்கேற்றத்திலும் நடிப்பதால் சென்னையிலேயே தங்கி இருக்கிறேன். இதற்கிடையில் எனது நண்பர்கள் சிலர் சர்வதேச குறும்பட போட்டிக்கு அனுப்புவதற்காக ஒரு படம் எடுத்தார்கள். அதில் நடித்துக் கொடுத்தேன். அது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அந்தப் படம் விருது பெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக் கொண்டிருக்கிறேன். கன்னட சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. என்கிறார் சஞ்சனா.