ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2015ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவிலிருந்து, லையர்ஸ் டைஸ் என்ற படம் தேர்வாகியுள்ளது. சினிமா துறையில் உலகின் மிகப்பெரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். 2015ம் ஆண்டு விருதுக்கான பணிகள் இப்போதே துவங்கிவிட்டன. முதற்கட்டமாக ஒவ்வொரு நாடுகளில் இருந்து படங்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன. இதில் 2015-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் பங்கேற்க, இந்தியாவிலிருந்த அனுப்பக் கூடிய திரைப்படங்களை தேர்வு செய்யும் போட்டியில் 30 படங்கள் பங்கேற்றன. அந்த திரைப்படங்களில் லையர்ஸ் டைஸ் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கீதாஞ்சலி தபா, நவாஸுதீன் சித்திக் ஆகியோர் நடித்த இந்தப்படத்தை என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, நள தமயந்தி உள்ளிட்ட தமிழ் படங்களிலும், பல மலையாள படங்களிலும் நடித்த கீது மோகன் தாஸ் இயக்கி இருந்தார். இந்திய-திபெத்திய எல்லையில் வாழும் பழங்குடி பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தியது இந்தப்படம். டில்லிக்கு வேலை தேடி சென்ற தனது கணவர் பல மாதங்களாக வீடு திரும்பாததை அடுத்து, அவரைத் தேடி தனது மகளுடன் செல்லும் பெண்ணின் பயணக் கதை இது. இந்தப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.