ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய், சந்தானம் நடித்த அரண்மனை படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படத்தின் கதை ரஜினி நடித்த ஆயிரம் ஜென்மங்கள் படத்தை தழுவியது அதனால் படத்தை தடைசெய்ய வேண்டும் என்று ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் தயாரிப்பாளர் முத்துராமன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தநிலையில் அரண்மனை கதை என்னுடையது என்கிறார் மலையாள நடிகை செம்மீன் ஷீலா.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: 30 வருடங்களுக்கு முன்பு நான் இயக்கிய மலையாளப் படம் யக்ஷகானம். இது பேய் படம். பெரிய வெற்றி பெற்றது. அப்போது தமிழ்நாட்டில் எனது நெருங்கிய நண்பராக இருந்த மதிஒளி சண்முகம் பெரிய பணக் கஷ்டத்தில் இருந்தார். அவருக்கு உதவுவதற்காக இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை அவருக்கு கொடுத்தேன். துரை இயக்க ஆயிரம் ஜென்மங்கள் என்ற பெயரில் என் படத்தை ரீமேக் செய்தார்கள்.
ஆயிரம் ஜென்மங்கள் கதை என்னுடையது. இன்று அதற்கு பலர் உரிமை கொண்டாடுகிறார்கள். தற்போது வெளிவந்துள்ள அரண்மனை ஆயிரம் ஜென்மங்கள் கதை என்றால் அரண்மனை கதையும் என்னுடையதுதான். இதற்காக நான் அரண்மனை படத்துக்கு தடை கேட்கபோவதுமில்லை. எந்த உரிமையும் கொண்டாடப்போவதில்லை. நன்றாக ஓடுகிற படத்தை யார் தடுக்க முடியும்.
அதோடு ஒரு வீட்டுக்குள் நடக்கும் பேய்கதைகள் அனைத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அது தவிர்க்க முடியாது. அந்த கதையை எப்படி சொல்கிறோம் என்பதில்தான் வித்தியாசம் காட்ட முடியும். இதனால் கதை என்னுடையது, அவருடையது என்று உரிமை கொண்டாடுவதெல்லாம் தவறானதாகும் என்கிறார் ஷீலா.