பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உலகத்தையே உலுக்கிய துயர சம்பவம் 1984ம் ஆண்டு நடந்த போபால் விஷ வாயு. இந்தகோர சம்பவத்தில் 3800 பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் இந்த விஷவாயு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள. இன்றும் அதன் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போபால் விஷ வாயு சம்பவத்தை மையமாக வைத்து ''போபால் - ஏ பிரேயர் பார் ரெயின்'' என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. சகாரா மூவி ஸ்டூடியோஸ் மற்றும் ரைசிங் ஸ்டார் என்டர்டைமன்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில், மார்டின் ஷீன், கல் பென், ராஜ்பால் யாதவ், தன்னிஷ்தா சாட்டர்ஜி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த போபால் சம்பவத்தால், 30 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதும் மக்கள் சாகிறார்கள் என்று ஒரு அழுத்தமான மெஸ்சேஜ்ஜை இப்போஸ்டர் சொல்கிறது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் இப்படம் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.