ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத் திரையுலகின் சிறந்த எழுத்தாளரும், இயக்குனருமான அடூர் கோபால கிருஷ்ணன் கேரளாவில் சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருந்த சினிமா தொடர்பான கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசிய போது இன்றைய சினிமாவின் நிலை குறித்து மிகவும் வருத்தம் தெரிவித்துப் பேசியுள்ளார்.
“திரைப்படத் தயாரிப்புச் செலவு என்பது தற்போது விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. கருப்புப் பணம் வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும்தான் இப்போதெல்லாம் படம் தயாரிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஒரு சாதாரண தயாரிப்பாளர் இப்போது படம் தயாரித்தால் அவர் நிச்சயம் மோசமான நிலையைச் சந்தித்து ஊரைச் சுற்றி வரும் நிலைக்குத் தள்ளப்படுவார். உண்மையிலேயே அதிக அக்கறையுடன் ஒருவர் திரைப்படம் இயக்க வரும் போதுதான் நல்ல திரைப்படம் பிறக்கிறது. இன்றைய நிலையில் திரைப்படத் தயாரிப்பில் விரும்பத்தகாத விஷயங்கள்தான் அதிகம் நடக்கிறது.
ஒரு திரைப்படத்தில் புகை பிடித்தல், மது அருந்துதல் குறித்த எச்சரிக்கை வாசகங்களை அந்த காட்சிகள் வரும் போது சேர்க்காமல் படம் ஆரம்பிக்கும் முன்போ, இடைவேளையின் போதோ காட்டுவதுதான் சரியாக இருக்கும், ” என்று அவருடைய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.