'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
சமீபத்தில் வெளிவந்த குர்சூரத் படத்தின் நாயகியான சோனம் கபூர், தனது சினிமா வாழ்க்கையில் பல்வேறு மாறுபட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதாகவும், திரும்ப திரும்ப ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். குர்சூரத் படத்தில் என்ஜின் கி சீதி பாடலில் கூட அவர் தனது மாறுபட்ட நடிப்பு திறமை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அது பற்றி அவர் கூறுகையில், நான் உண்மையில் அப்படி கிடையாது. அது எனது கதாபாத்திரம். எனத நிஜ வாழ்க்கையில் இருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அந்த பாடலில் அவ்வாறு நடித்தேன். ஒவ்வொரு சமயமும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கவே நான் ஆசைப்படுகிறேன். மிலி போன்ற கதாபாத்திரத்தில் இதற்கு முன் நான் நடித்ததில்லை. இனி மேல் இது போன்ற கதாபாத்திரத்தில் மறுபடியும் நடிக்க வேண்டாம் என நினைக்கிறேன்.
ராஞ்ஹனா படத்தில் நான் நடித்த ஜோயா கதாபாத்திரம் போன்று நடிக்க நினைக்கிறேன். இருப்பினும் அதே போன்ற கேரக்டரில் மீண்டும் படிக்க வேண்டாம் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் சோனம் கபூரை இனி மாறுபட்ட கதாபாத்திரங்களில் காணலாம் என கூறப்படுகிறது.