'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத் திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவராக விளங்குபவர் ஸ்ரீகுமரன் தம்பி. 20க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தும், 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும் எண்ணற்ற பாடல்களை எழுதியவருமான இவர் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கிறார். சுமார் 20 வருடங்களாக திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த இவர் ஏற்கெனவே அதற்கான காரணங்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது மோகன்லால், மம்முட்டி மீது மேலும் சில குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார்.
“என்னுடைய படங்கள் மூலமாகத்தான் மோகன்லாலும், மம்முட்டியும் மலையாளத் திரையுலகில் தங்களுக்கென ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஆனால், அதன் பின் அவர்கள் ஸ்டார் ஆன பின் என்னிடம் மிகவும் தரக்குறைவாகவும், அவமரியாதையாகவும் நடந்து கொண்டார்கள். 90களில் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி ஆகியோர்தான் மலையாளத் திரையுலகில் செல்வாக்காக இருந்தார்கள். அவர்களது படங்களைத் தவிர வேறு எந்தப் படங்களையும் வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் வாங்க மறுத்தார்கள். அதை மீறி அவர்கள் இல்லாமல் படமெடுத்தால், ஏன் அவர்களை வைத்து படமெடுக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
24 படங்களைத் தயாரித்து, திரையுலகில் நல்ல பெயரெடுத்தாலும் அந்த ஸ்டார்களை எதிர்த்துக் கொண்டு என்னால் அப்போது படங்களை வெளியிட முடியாமல் போராட வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் மம்முட்டி என்னுடைய தயாரிப்பில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டினார், என்னை எழுதவோ, இயக்கவோ கூடாது என்றார். தனது குருவான கே.ஜி.ஜார்ஜ் அவர்களிடமே திமிராக நடந்து கொண்டவர்தான் மம்முட்டி. நான் மோகன்லாலைச் சந்தித்து கால்ஷீட் கேட்கும் போதெல்லாம் அவர் என்னை தவிர்த்து வந்தார். அப்படிப்பட்டவர்களின் நடவடிக்கையால்தான் நான் திரையுலகை விட்டே விலக நேர்ந்தது. நடிகர்களின் அளவு கடந்த சம்பளம்தான் மலையாளத் திரையுலகை தற்போது சீரழித்து வருகிறது என்று அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.