வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாலிவுட்டின் மிக திறமை வாய்ந்த நடிகராக வலம் வந்த அக்ஷை கண்ணா நீண்ட இடைவெளிக்கு பிறகு தேவ் பெனிகல் இயக்கும் பாம்பே சாமுராய் படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்கு நடிக்க வந்துள்ளார். இந்த படத்தில் அக்ஷையுடன் கரீனா கபூரும் ஃபரான் அக்தரும் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் மாறுபட்ட வேடத்தில் அக்ஷை நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அந்த படத்தின் கதையில் நிறைய மாறுதல்கள் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் மற்றும் டைரக்டரிடம் அக்ஷை கூறி உள்ளாராம். கதையில் அக்ஷையின் தலையீடு அதிகம் உள்ளதால் பட நிறுவனம் அவர் மீது அதிருப்தியில் உள்ளதாம். நீண்ட நாட்களுக்கு பின் நடிக்க வந்திருக்கும் அக்ஷையிடம் இந்த ஒரு படம் தான் கைவசம் உள்ளதாம். இருந்தாலும் கதையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தொடர்ந்து பட அதிபர்களிடம் அக்ஷை பேசி வருகிறாராம். இதனால் இப்படத்தை அவரை மாற்றி விட்டு அவருக்கு பதிலாக இர்பானை புக் செய்ய பட நிறுவனம் பரிசீலித்து வருகிறதாம்.