பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா. அதன் பிறகு சின்னத்திரை பக்கம் வந்தார். மெட்டிஒலி, கோலங்கள், தென்றல், செல்லமே உள்பட பல சீரியல்களில் நடித்தார். மீண்டும் சினிமாவுக்கு திரும்பினார். அக்கா, அண்ணி வேடங்கள்தான் கிடைத்தது. இதனால் வெறுத்துப்போனவர் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி வாணி ராணியிலும், மகாபாரதத்திலும் நடித்து வருகிறார்.
இதுவரை நடிகையாக இருந்த நீலிமா தற்போது அழகிய சினேகிதி என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாகியிருக்கிறார். இது பெண்களுக்கான நிகழ்ச்சி, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டு வந்து அழகிய சினேகிதியாக வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி.
"தொகுப்பாளினியாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. பல வாய்ப்புகள் வந்தபோதும் எனக்குள் இருந்த தயக்கத்தால் ஏற்கவில்லை. இப்போது துணிச்சலுடன் களம் இறங்கிவிட்டேன். இதை சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் நீலிமா.