ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடிக்கும் நண்பேன்டா என்ற படத்தின் படப்பிடிப்பு விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூந்துறையில் நடந்து வருகிறது. உதயநிதியும், காமெடி நடிகர் சந்தானமும் சிறையில் இருந்து தப்பி செல்வது போன்ற காட்சியை படமாக்க. ஆர்ட் டைரக்டரின் பணியாட்கள் கடந்த சில நாட்களா ஷெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த பணிக்காக ராட்சத கிரேன் ஒன்று பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. நேற்று (செப் 21) வேலை நடந்து கொண்டிருந்தபோது திடீரென கிரேன் சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அருணகிரி, ரமேஷ், சதீஷ், மூர்த்தி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளை (செப் 22) முதல் அங்கு நடைபெறுவதாக இருந்த நண்பேண்டா படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.