ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வேந்தர் தொலைக்காட்சியில் இருவர், ரெட்டவாலு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினி கிருத்திகா. இவர் ஒரு நகை வடிவமைப்பாளர். விரைவில் அது தொடர்பான நிறுவனம் ஒன்றையும் தொடங்க இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்திலிருந்தே தொகுப்பாளினியாக வேண்டும் என்பதுதான் கனவு. ஒரு நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் இப்போது இரண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்.
எங்கள் முன்னோர்கள் நகை வடிவமைப்பில் நிபுணர்களாக இருந்தவர்கள். எங்கள் தாத்தா நகை வடிவமைக்கும்போது நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அந்த ஆர்வம் எனக்குள் இருந்ததால் நகை வடிவமைப்பும், எம்ராய்டரிங்கும் முறைப்படி கற்றிருக்கிறேன். நிறைய டிசைன்கள் வடிவமைத்து வைத்திருக்கிறேன். அதை வைத்து ஒரு பெரிய பொடீக் திறக்க இருக்கிறேன் என்கிறார் கிருத்திகா.