இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழில் கனகவேல் காக்க, வல்லக்கோட்டை, வராயோ வெண்ணிலாவே, முரண் படங்களில் நடித்த கன்னட நடிகை ஹரிப்ரியா. கன்னடத்தில் இப்போது பிசியான நடிகை.
பிளை என்ற கன்னடப் படத்தில் நடிக்க 6 லட்சம் சம்பளம் பேசப்பட்டு அதில் 2 லட்சத்தை முன்பணமாக பெற்றிருந்தார். பல்வேறு காரணமாக பிளை படம் தொடங்கப்படாமல் தாமதமாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் கன்னட நடிகர் சுதீப்புடன் ஒரு படத்தில் நடிக்கச் சென்று விட்டார். பிளை படம் தொடங்கப்பட்டபோது ஹரிப்ரியா சுதீப்புடன் நடித்துக் கொண்டிருந்தார். இதனால் பிளை படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டார்.
இதனால் பிளை பட தயாரிப்பாளர், நிதி சுப்பையாவை வைத்து படத்தை ஆரம்பித்து விட்டார். ஹரிப்ரியாவிடம் கொடுத்த அட்வான்ஸ் 2 லட்சத்தை திருப்பி கேட்டுள்ளார். அவரோ உங்கள் படத்துக்கு நான் கொடுத்த கால்ஷீட்டை வீணாக்கி விட்டீர்கள். என் மீது எந்த தவறும் இல்லை. அதனால் பணத்தை திருப்பித் தரமுடியாது என்ற மறுத்துவிட்டார். இதனால் தயாரிப்பாளர், கன்னட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.