சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் |
திரையுலகிலும் பத்திரிகையாளர்களிடமும் தற்போது 'அஞ்சாத' நடிகரின் ஆச்சரியமான ஆதரவுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த 'அஞ்சாத' சூரிய நடிகரின் சமீபத்திய படம் வெளிவந்து தோல்வியடைந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனாலும், அந்த தோல்வியை மறைப்பதற்காக கடந்த சில நாட்களாக பத்திரிகைகளுக்கு அந்த நடிகர் சார்பாக அனுப்பப்படும் செய்திகள்தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன. பிரம்மாண்ட இயக்குனரின் பட இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த ஹாலிவுட் நடிகருடன் அந்த பிரம்மாண்டப் படத்தின் நாயகனே தனிப்பட்டு எந்த புகைப்படமும் எடுக்கவில்லை என்கிறார்கள். அப்படியிருக்க ஹாலிவுட் நடிகருடன் அஞ்சாத நடிகர் சந்தித்ததாக புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்கள். மறுநாள் மீடியாக்களில் அந்த பிரம்மாண்ட படத்தின் இசை வெளியீட்டு செய்தியுடன், ஹாலிவுட் நடிகருடன் அஞ்சாத நடிகர் எடுத்துக் கொண்ட புகைப்படமும் ஒரு செய்தியாகவே வலம் வந்தது.
அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. இரண்டு நாட்கள் கழித்து அந்த பிரம்மாண்ட படத்தை அஞ்சாத சூரிய நடிகர் அவருடைய வாட்ஸ்அப் 'புரொஃபைல்' படமாக வைத்திருக்கிறார் என்று செய்தி அனுப்பினார்கள். இன்னும் சில நாட்களில் அவருடைய தம்பி நடித்து 'சென்னை' படம் வெளிவர உள்ள நிலையில், அண்ணனான அஞ்சாத சூரிய நடிகர் தம்பி நடித்த படத்தை 'புரொஃபைல்' படமாக வைத்துக் கொள்ளாமல் நீண்ட நாளாகவே எதிரியாகப் பார்க்கும் பிரம்மாண்ட படத்தின் நாயகன் நடித்த படத்தை வைத்திருப்பதன் காரணம் என்ன ? என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள் . இருவரும் 'தந்தை மகன்' படத்தில் சேர்ந்து நடித்த காலத்திலிருந்தே முட்டல், மோதல்கள் இருந்து வருகிறது, அப்படியிருக்க இந்த திடீர்ப் பாசம் ஏன்...இதற்கு முன்னர் பிரம்மாண்ட இயக்குனர் அழைத்தும் 'பிரண்ட்' படத்தில் நடிக்காமல் விலகியதால், தற்போது சமயம் பார்த்து அவரைக் குளிர்விக்க எடுக்கும் முயற்சியோ...என்றும் வேறு சிலர் பேசிக் கொள்கிறார்கள்.
'நடப்பது நடக்கட்டும், கிடைப்பது கிடைக்கட்டும்...நான் ரொம்ப துணிஞ்சவன்டா...' என்ற 'பிரம்மா' படத்தின் பாடல்தான் ஏனோ ஞாபகத்திற்கு வருகிறது.