இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
சமீபகாலமாக தான் எந்த மேடையில் ஏறினாலும் ஏதாவது ஒரு விசயத்தைப்பற்றி போட்டுத்தாக்கி விட்டுத்தான் இறங்குகிறார் டி.ராஜேந்தர். அந்த வகையில் நேற்றைய தினம் சென்னையில் நடந்த கல்கண்டு படத்தின் ஆடியோ விழாவில், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் காமெடியன்களை செம தாக்கு தாக்கினார்.
அவர் பேசும்போது, இன்றைக்கு ஆரம்பத்தில் பூனை மாதிரி வரும் நடிகர்கள் ஓரிரு படங்கள் ஹிட்டடித்ததும் புலியாக மாறி விடுகிறார்கள். ஒரு நாள் கால்சீட்டாக ஆயிரம், இரண்டாயிரம் என்று வாஙகியவர்கள் லட்சங்களை தாண்டி கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறார்கள். நான் அறிமுகம் செய்த ஒரு காமெடி நடிகர்கூட வெறும் 1500 ரூபாய் வாங்கிக்கொண்டுதான் என் படத்தில் நடித்தார். ஆனால் இப்போது அவர் சம்பளம் கோடிக்கணக்கில் என்கிறார்கள்.
முன்பெல்லாம் காமெடி நடிகர்கள் நியாயமாக சம்பளம் வாங்கினார்கள். அவர்களெல்லாம் ரசிகர்களை மட்டுமின்றி தயாரிப்பாளர்களையும் சிரிக்க வைத்தனர். ஆனால், இன்றைய சிரிப்பு நடிகர்களோ, ரசிகர்களை சிரிக்க வைத்தாலும், கோடி கோடியாக சம்பளம் தரும் தயாரிப்பாளர்களை அழ வைக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்? என தானும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் பேசினார்.