டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிகே படம் தொடங்கியதில் இருந்தே ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் பாலிவுட் நடிகர் அமீர்கான். முதலில் அவர் நிர்வாணமாக போஸ் கொடுத்த போஸ்டர்கள் வெளியாகி நாடெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொது ஜனங்கள் அன்றாடம் படிக்கும் நாளேடுகளில் இந்த போஸ்டர் வெளியானதால் அவர் மீது பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
அதையடுத்து, அந்த படத்தின் கதைக்கு அந்த காட்சி அவசியமானது. படம் பார்க்கும்போது அப்படியொரு காட்சி தேவை என்று ரசிகர்களே சொல்வார்கள் என்று பேட்டி கொடுத்தார் அமீர்கான். இருப்பினும், அவர் மீது தொடரப்பட்ட வழக்கு பின்னர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், அந்த வழக்கை கோர்ட் பின்னர் தள்ளுபடி செய்து விட்டது.
அதன்பிறகு, அதே பிகே படத்தின் இரண்டாவது போஸ்டரை டீசன்டாக தான் போஸ் கொடுப்பது போல் வெளியிட்டார் அமீர்கான். இதனால், நிர்வாண சர்ச்சை தற்போதுதான் மெல்லமாக அடங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இப்போது பிகே படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஒரு கோயிலில் நடந்தபோது, யூனிட் நபர்கள் அனைவரும் தங்களது செருப்புகளை வெளியில் கழட்டி விட்டு செல்ல அமீர்கான் மட்டும் செருப்பு அணிந்தே கோவிலுக்குள் சென்றாராம்.
அதைப்பார்த்து கோயில் நிர்வாகிகளும், பொதுமக்களும் அமீர்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்களாம். இதையடுத்து, இந்து அமைப்புகள் அமீர்கான் மீது மும்பை கோர்ட்டில் வழக்குத் தொடரவும் தயாராகிக் கொண்டிருக்கிறதாம். ஆக, ஒரு சர்ச்சை அடங்குவதற்குள் இப்போது இன்னொரு சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறார் அமீர்கான்.