பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வெறும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து குறைவான அனுபவம் உள்ளவர் டைகர் ஷெரப். ஆனால் பல ஹிட் படங்களில் நடித்து பெரிய ஹீரோ அந்தஸ்தில் இருப்பவர் சூரஜ் பன்சோலி. அனுபவத்தில் மலையும் மடுவும் போல் இருக்கும் இவர்கள் இருவரையும் இணைத்து படம் பண்ணுவதற்காக பிரபு தேவா, இவர்களை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.
பாலாஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை பிரபுதேவா இயக்க உள்ளாராம். டைகரும், சூரஷூம் நன்கு பரிட்சியம் ஆனவர்களாக இருந்தும் இப்போது தான் முதல் முறையாக இந்த படத்தில் ஒன்றாக நடிக்க உள்ளார்களாம். பாலிவுட்டில் அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த இந்த தகவலை பிரபு தேவாவின் நெருங்கிய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
டைகர் மற்றும் சூரஜை வைத்து பிரபு தேவா இயக்க உள்ள இந்த புதிய படத்தின் ப்ரீ-புரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறதாம். அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இந்த திரைப்படத்தை வெளியிடவும் பிரபுதேவா திட்டமிட்டுள்ளாராம்.