பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்திற்கு பிறகு வி.சி.வடிவுடையான் சொந்தமாக தயாரித்து இயக்கும் படம் கன்னியும் காளையும் செம காதல். கரணின் 75வது படம். திருப்தா என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். தருண்கோபி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
"திருநெல்வேலி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஜமீன்கள் அதிகம். ஒரு காலத்தில் குறுநில மன்னர்போல வாழ்ந்த பல குடும்பங்கள் இப்போது வறுமையில் வாடுகிறது. ஆனாலும் தான் ஜமீன் பரம்பரை என்கிற கர்வம் அவர்களுக்கு இருக்கும். இதை மையமாக வைத்துதான் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறேன். கரன் ஒரு ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த இன்றைய இளைஞர். எல்லாத்தையும் இழந்தபோதும் ஜமீன் கர்வத்தோடு வாழ்கிறவர். அவர் பண்ணுகிற அலப்பறைகளை காமெடியாக காட்டுகிறேன்.
18 ம் நூற்றாண்டில் அவர் குடும்பம் எப்படி இருந்தது என்பதிலிருந்து படம் தொடங்கும். இதற்காக நாகர்கோவில் கன்னியாகுமரி பகுதிகளில் உள்ள பழைய ஜமீன் அரண்மனைகளை தேடிப்பிடித்து அதில் படமாக்கி இருக்கிறேன் என்கிறார் வி.சி.வடிவுடையான்.