அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
கவிஞர் வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்து திரைப்பட பாடலாசிரியராகவும், எழுத்தாளராகவும், சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
தற்போது கபிலன் சின்னத் திரை நிகழ்ச்சி தயாரிப்பை மையமாக வைத்து ஒரு நாவல் எழுதியுள்ளார். மெய்நிகரி என்பது நாவலின் தலைப்பு. இது கபிலன் எழுதியுள்ள மூன்றாவது நாவலாகும்.
ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தும் ரியாலிட்டி ஷோக்கள் பற்றி இந்த நாவலில் சொல்லியிருக்கிறார். நிகழ்ச்சி தயாரிப்பாளர், தொகுப்பாளர், இயக்குனர், நிகழ்ச்சி நடக்கும் விதம், அங்கு நடக்கும் சில திரைமறை ரகசியங்கள் என எல்லாவற்றையும் இந்த நாவலில் வெளிப்படையாக எழுதியிருக்கிறார். ஒரு படத் தொகுப்பாளரின் பார்வையில் இந்த நாவலின் கதை சொல்லப்படுகிறது. வருகிற செப்படம்பர் மாதம் கிழக்கு பதிப்பகம் இந்த நாவலை வெளியிடுகிறது.