கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரை ஐ படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு அழைத்து வந்திருந்தனர்.
எத்தனையோ பெரிய ஹீரோக்கள் இருக்க, புனித் ராஜ்குமாரை அழைத்ததற்கும் மிகப்பெரிய காரணம் உண்டு.
ராஜ்குமார் காலத்திலிருந்தே கன்னட சினிமா உலகம் அந்த குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது.
ராஜ்குமாரின் ஆதரவு இல்லாமல் கன்னடத்திரையுலகில் யாருமே படம் எடுக்க முடியாது என்று சொல்வார்கள்.
அவரது மறைவுக்குப் பிறகு ராஜ்குமாரின் பிள்ளைகளான புனித் ராஜ்குமார், சிவ ராஜ்குமார் கட்டுப்பாட்டுக்குள் கட்டுண்டு கிடக்கிறதாம் கன்னட திரையுலகம்.
கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட நேரடி கன்னடப்படங்களின் வசூல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, மற்ற மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்களை கர்நாடகாவில் வெளியிடுவதிலும், கன்னடத்தில் டப் செய்யப்பட்ட படங்களை வெளியிடுவதிலும் அங்கே கடுமையான கட்டுப்பாடு உள்ளது. இப்படி கட்டுப்பாடு போட்டதே ராஜ்குமாரின் குடும்பத்தினர்தான்.
பல கோடி போட்டு ஐ படத்தைத் தயாரித்த ஆஸ்கார் ரவி, போட்ட பணத்தை விரைந்து எடுக்கும் எண்ணத்தில், கர்நாடகாவில் சுமார் 200 தியேட்டர்களில் ஐ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் கர்னாடகாவில் உள்ள கட்டுப்பாடு ஆஸ்கார் ரவிக்கு பெரும் தடையாக இருக்கிறது.
இந்த கட்டுப்பாட்டை ரகசியமாக தளர்த்த வேண்டும் என்றும், ஐ படத்தை அங்கே பல தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கணக்குப்போட்டுத்தான் கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரை அழைத்து வந்து, ஹாலிவும் நடிகர் அர்னால்ட் அருகில் உட்கார வைத்து பெருமைப்படுத்தினார்.
புனித் ராஜ்குமருக்கு இப்படி ஒரு மரியாதையைச் செய்ததன் மூலம், ஐ படத்தை கர்னாடகாவில் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்துவிடமுடியும் என்று நம்பிக்கொண்டிருக்கிறாராம் ஆஸ்கார் ரவி.