கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
தெலுங்குத் திரையுலகத்தைப் பொறுத்தவரை தற்போது இரண்டு விஷயங்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஒன்று சிரஞ்சீவியின் 150வது படம் பற்றிய அறிவிப்பு, இரண்டாவது நட்சத்திரத் தம்பதியரான அமலா - நாகார்ஜுனாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமாக உள்ள படம் பற்றிய அறிவிப்பு. தன்னுடைய 150வது படம் பற்றி சமீபத்தில் நடைபெற்ற 'கோவிந்துடு அந்தாரிவாடிலே' படத்தின் இசை வெளியீட்டில் சிரஞ்சீவியே படம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பமாகிவிடும் என்று சொல்லிவிட்டார். ஆனால், படத்தின் இயக்குனர் மற்ற விவரங்களைப் பற்றி அவர் எதுவும் அறிவிக்கவில்லை.
அதே போல் அமலா - நாகார்ஜுனாவின் மகன் அகில் படம் பற்றி பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்தாலும், எதுவும் இன்னும் உறுதி செய்யப்படாமலேயே இருக்கிறது. முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விநாயக் இயக்கத்தில்தான் அகில் அறிமுகமாக உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 'மனம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் சில நிமிடங்களே வந்தாலும் அகில் ஒரு ஆரவார அலையை ஏற்படுத்திவிட்டார். அவரை சரியான சமயத்தில் நாயகனாக அறிமுகப்படுத்த நாகார்ஜுனா முடிவு செய்து மகனுக்காகவும் கதைகளைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்.
இதனிடையே, நாளை 20ம் தேதி அகில் பிறந்த நாள் வருகிறது. அதையொட்டி அவர் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்புள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.