ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்குத் திரையுலகத்தைப் பொறுத்தவரை தற்போது இரண்டு விஷயங்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஒன்று சிரஞ்சீவியின் 150வது படம் பற்றிய அறிவிப்பு, இரண்டாவது நட்சத்திரத் தம்பதியரான அமலா - நாகார்ஜுனாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமாக உள்ள படம் பற்றிய அறிவிப்பு. தன்னுடைய 150வது படம் பற்றி சமீபத்தில் நடைபெற்ற 'கோவிந்துடு அந்தாரிவாடிலே' படத்தின் இசை வெளியீட்டில் சிரஞ்சீவியே படம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பமாகிவிடும் என்று சொல்லிவிட்டார். ஆனால், படத்தின் இயக்குனர் மற்ற விவரங்களைப் பற்றி அவர் எதுவும் அறிவிக்கவில்லை.
அதே போல் அமலா - நாகார்ஜுனாவின் மகன் அகில் படம் பற்றி பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்தாலும், எதுவும் இன்னும் உறுதி செய்யப்படாமலேயே இருக்கிறது. முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விநாயக் இயக்கத்தில்தான் அகில் அறிமுகமாக உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 'மனம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் சில நிமிடங்களே வந்தாலும் அகில் ஒரு ஆரவார அலையை ஏற்படுத்திவிட்டார். அவரை சரியான சமயத்தில் நாயகனாக அறிமுகப்படுத்த நாகார்ஜுனா முடிவு செய்து மகனுக்காகவும் கதைகளைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்.
இதனிடையே, நாளை 20ம் தேதி அகில் பிறந்த நாள் வருகிறது. அதையொட்டி அவர் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்புள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.