Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நானும் பச்சை தமிழன்தான், எனக்கும் தமிழ் உணர்வு உள்ளது! - கத்தி ஆடியோ விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு

19 செப், 2014 - 10:30 IST
எழுத்தின் அளவு:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கத்தி படத்தின் ஆடியோ விழா நேற்று இரவு 7 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக, ஆர்.பி.செளத்ரி, எஸ்.ஏ.சந்திரசேகரன், ஏ.எல்.விஜய், தாணு, ஆர்யா, விக்ரமன், தனஞ்செயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மற்றபடி விஜய்யின் மற்ற படங்களுக்கு அழைப்பது போன்று பெருவாரியான அவரது நலம்விரும்பிகள் இந்த விழாவுக்கு அழைக்கப்படவில்லை.

மேலும், கடந்த 15-ந்தேதி சென்னையில் நடந்த ஐ படத்தின் ஆடியோ விழாவை மாதிரி இரவு 8 மணிக்கு தொடங்கப்பட்டு 11 மணிக்குத்தான் விழா நிறைவு பெறுமோ என்று நினைக்கப்பட்டதற்கு மாறாக, 7.10க்கு தொடங்கி 9 மணிக்கெல்லாம் ஆச்சர்யப்படும் வகையில் விழாவை நிறைவு செய்து விட்டார்கள்.


முன்னதாக, விழா நடைபெறும்போது சில அமைப்புகள் போர்க்கொடி பிடித்து விடுமோ என்கிற அச்சுறுத்தல்களும் ஒரு பக்கம் இருந்ததால் விழா நடைபெற்ற பகுதியில் பலத்த செக்யூரிட்டிகள் போடப்பட்டிருந்தது. விழா அரங்கிற்குள் வருபவர்களிடம் அழைப்பிதழோ அல்லது பத்திரிகையாளர்கள் என்றால் ஐடி கார்டோ இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.


ஆக, கத்தி ஆடியோ விழா பெரிய சர்ச்சைகளுக்கு நடுவே நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் அமைதியான முறையில் நடந்தது முடிந்தது.


இவ்விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ். பேசுகையில், கத்தி படத்தில் விஜய் ஜீவானந்தம், கதிரேசன் என்ற இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். நான் விஜய்யிடத்தில், துப்பாக்கி ஜெகதீஷ், கத்தி ஜீவானந்தம், கதிரேசன் இவர்களில் யாரை உங்களுக்கு பிடிக்கும் என்றேன் அவர் கதிரேசன்தான் பிடிக்கும் என்றார். எனக்கும் அப்படித்தான். அதேபோல் ரசிகர்களுக்கும் கதிரேசனைத்தான் பிடிக்கும்.


அதோடு, துப்பாக்கி படத்தைவிட கத்தி படம் ரசிகர்களுக்கு இன்னும் அதிகமாக பிடிக்கும். அந்த அளவுக்கு விஜய்யின் கதாபாத்திரம் அழுத்தமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.


மேலும், நான் பணத்துக்காக இந்திக்கு சென்று படம் இயக்கவில்லை. சென்னைக்கு அப்பால் உள்ள ஊரில் இருந்து வந்த ஒருவனாலும் பாலிவுட்டில் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கத்தான் எடுக்கிறேன். நானும், விஜய்யும் பணத்திற்காக மட்டுமே படமெடுக்கவில்லை. அதோடு, நானும் பச்சை தமிழன்தான். எனக்கும் தமிழ் உணர்வு உள்ளது என்பதை இந்த தருணத்தில் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in