'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும் தெலுங்கு, மலையாளத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். தமிழில்தான் என்னதான் திறமையாக நடித்தாலும் படங்களின் வெற்றிதானே ஒரு நடிகையை முன்னணிக்குக் கொண்டு வரும். 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தில் நாயகியாக நடித்திருந்தாலும் அந்தப் படம் பல மாதங்களாக வெளிவராமலேயே முடங்கிக் கிடக்கிறது.
தற்போது தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த 'ஐஸ் க்ரீம் ' படத்தில் நாயகியாக நடித்த தேஜஸ்வி நடிக்கும் புதிய படத்தில் அவருடைய அம்மாவாக நடிக்க சம்மதித்திருக்கிறாராம் நித்யா மேனன். ஒரு இளம் நாயகிக்கு மற்றொரு இளம் நாயகியே அம்மாவாக நடிக்க சம்மதித்திருப்பது ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை, 'ஓனமலு' என்ற படத்தை இயக்கிய கிராந்தி மாதவ் இயக்குகிறார். 'ஐஸ் க்ரீம்' படத்தில் தேஜஸ்வி கிளாமராக நடித்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள நடிகைகளைப் பொறுத்தவரையில் கதாபாத்திரங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதை நித்யா மேனன் போன்ற ஒரு சில நடிகைகள் அவ்வப்போது புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவருடைய இந்த முடிவுக்கும் பாராட்டு கிடைக்கத்தான் செய்கிறது.