திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
தெரு நாய்களை கல்லால் அடிக்கக்கூடாது. துன்புறுத்தக்கூடாது. அவற்றை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று நடிகை த்ரிஷா நீண்டகாலமாக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும், பிராணிகள் நல வாரியத்திலும் உறுப்பினராக இருக்கிறார். அதேபோல் நடிகை அமலாவும் நாய்கள் உள்பட அனைத்து பிராணிகளையும் ஆதரிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு, தானும் நாய்களை பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில், பருத்தி வீரன் ப்ரியாமணிக்கு புலிகள் மீது பாசம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சில மிருகக்காட்சிகளில் காட்டில் சுதந்திரமாக அலையும் புலிகளை கூண்டில் அடைத்து காட்சி பொருளாக வைத்துள்ளார்கள். அது மிருக காட்சி சாலை விதிமுறைகளுக்கு எதிரானது என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
மேலும், மனிதர்களை வாழ்நாள் முழுக்க ஒரு கூண்டிற்குள் அடைத்து வைத்தால் எவ்வளவு கொடுமையாக இருக்கும். அதே மாதிரிதானே விலங்குகளுக்கும் இருக்கும். அதனால் மிருக காட்சி சாலைகளில் புலிகளை கூண்டிற்குள் அடைத்து வைக்காமல், அவை காட்டுக்குள் சுதந்திரமாக திரிவது போன்று அவற்றை பராமரிக்க வேண்டும். அதுதான் வாயில்லா ஜீவன்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும் என்றும் தனது கருத்தை தெரிவித்துள்ளார் ப்ரியாமணி.