தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு மனிதனுக்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள், விஷயங்கள் நிறைய நடந்தாலும், கஷ்டப்படும் நேரத்தில் யார் கூடவே இருக்கிறார்களோ அவர்கள் மீது அதீதமான பாசம் வந்துவிடும். உறவினர்களோ அல்லது நண்பர்களோ 'இடுக்கண் வருங்கால்' யார் நம்முடன் இருக்கிறார்களோ அவர்களைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. அப்படி ஒரு சம்பவத்தைப் பற்றி நேற்று நடைபெற்ற 'கத்தி' இசை வெளியீட்டின் போது பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அவர் பேசுகையில், “கத்தி' படத்தை தீபாவளிக்கு வெளியிடணும்னு முடிவு செஞ்சதும், இரவு பகலா வேலை நடக்க ஆரம்பிச்சது. ஒரு பக்கம் பின்னணி இசை, மறுபக்கம் ஸ்பெஷல் எபெக்ட்ஸ், மிக்ஸிங் இப்படி பல வேலைகள். இருக்கிற டென்ஷன்ல அப்படியே மைண்ட் பிளாக் ஆகி ஒரு நாள் கீழே விழுந்துட்டேன். என்னை ஆம்புலன்ஸ்ல தூக்கிக்கிட்டு ஆஸ்பிட்டலுக்கு கூட்டி வந்தாங்க. அப்ப என் கூடவே பக்கத்துல இருந்து பார்த்துக்கிட்டாரு விஜய் சார். அவருடைய அன்பு எப்படிப்பட்டதுன்னு அன்னைக்கு நான் புரிஞ்சிக்கிட்டேன். ட்ரீட்மென்ட்டுக்குப் பிறகு கண் முழிச்சிப் பார்த்ததும், டாக்டர்ஸ் என்னைத் தட்டித் தட்டி, இதோ எதிர்ல இருக்கிறது யாருன்னு தெரியுதான்னு நின்னுக்கிட்டிருந்த விஜய் சாரைப் பார்த்துக் கேட்டாங்க. அவரைத் தெரியலைன்னு சொன்னால் என் பையன் கூட என்னை அடிப்பான்.
கோடானு கோடி இளைஞர்கள் மட்டுமில்லாம, அடுத்த தலைமுறை குழந்தைங்க, காலேஜ் பொண்ணுங்க, ஹவுஸ் ஒய்ப் என எல்லோரும் விஜய் சாரை தங்களோட அண்ணனா நினைச்சிருக்காங்க. இப்படி பலரோட அன்பை விஜய் சார் சேர்த்து வச்சிருக்காரு, ” என்று உருக்கமாகப் பேசினார்.