விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
மலேசியாவில் உள்ள மலாக்கா மாநிலத்தில் வருகிற அக்டோபர் 2 ந் தேதி முதல் 5ந் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. மலாக்கா தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். ஆண்டு தோறும் இங்கு நடக்கும் எடிசன் சர்வதேச திரைப்பட விழா மலேசியா நாட்டின் மிகப்பெரிய திரைப்பட விழாவாகும். இதில் இந்த ஆண்டு நான் சிவப்பு மனிதன் படம் திரையிடப்படுகிறது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
விஷால், லட்சுமிமேனன் நடித்த இந்தப் படம் கமர்ஷியல் ஆக்ஷன் படமாக இருந்தாலும் நார்கோலெப்ஸி எனப்படும் தூக்க வியாதி தொடர்பான படம் என்பதால் திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நான் சிவப்பு மனிதனை திரு இயக்கி இருந்தார். படம் கமர்ஷியலாக சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.