டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வேடப்பன், வெளுத்துக்கட்டு உள்பட சில படங்களில் நடித்தவர் அருந்ததி. பெங்களூரைச் சேர்ந்தவரான இவருக்கும் விஜய், அஜீத், சூர்யா என்ற பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற கனவெல்லாம் இருந்தது. ஆனால், எதுவும் கைகூடவில்லை. இருப்பினும் கிடைத்த படங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக, விமல்-பிரசன்னா நடித்த நேற்று இன்று என்ற படத்தில் ஒரு விலைமாது ரோலில் படம் முழுக்க ஒரு டீசர்ட்டை அணிந்து நடித்திருந்தார். அதையடுத்து, அருந்ததி நடிப்பில் தொட்டால் தொடரும், சரவணப் பொய்கை, நாய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்கள் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன.
ஆனால், இதன்பிறகு நடிப்பதற்கு இன்னமும் எந்த கம்பெனியும் அருந்ததியை அணுகவில்லையாம். அதனால் சில மாதங்களாக வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும் அருந்ததி, இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு மாதத்தில் சென்னையை காலி செய்து விட்டு தனது சொந்த ஊரான பெங்களூருக்கு சென்று விட முடிவெடுத்துள்ளாராம். ஒருவேளை அதற்குள் தொட்டால் தொடரும், நாய்கள் ஜாக்கிரதை படங்கள் வெளியாகி ஹிட்டாக அமைந்து விட்டால், பெங்களூருக்கு திரும்பிச்செல்லும் தனது முடிவை மறுபரிசீலனை செய்வாராம் அருந்ததி.